25 6844220207a6e
இலங்கைசெய்திகள்

கடந்த ஆட்சிகளின் நடந்த மற்றுமொரு பாரிய மோசடி! பலர் உயிரிழப்பின் பின்னணி

Share

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க தேவையில்லாத 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.

எனினும் வழங்கப்பட்ட பரிந்துரையை போக்குவரத்து அமைச்சு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட பெரும்பாலான கடுமையான விபத்துக்கள், 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பெற்ற சாரதிகளால் ஏற்பட்டவை என தெரியவந்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறித்த பரிந்துரையை செய்திருந்த போதும் அதனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ சான்றிதழ்களை பெற்ற பிறகு, பின்னர் சாரதிகளின் உரிமங்களை ரத்து செய்து, அந்த ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிமங்களை வழங்க முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகத்தால் முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் கடந்த அரசாங்கத்தின் பலமான நபரால் இந்த பரிந்துரை இடைநிறுத்தப்பட்டது.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையிலான திணைக்கள தலைவர்கள், எதிர்காலத்தில் இந்த ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, சமகால அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓட்டுநர் உரிமங்களைப் பெற்ற ஓட்டுநர்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்களாக இருக்கலாம் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இதுபோன்ற ஓட்டுநர்கள் விபத்துக்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...