25 6844220207a6e
இலங்கைசெய்திகள்

கடந்த ஆட்சிகளின் நடந்த மற்றுமொரு பாரிய மோசடி! பலர் உயிரிழப்பின் பின்னணி

Share

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க தேவையில்லாத 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.

எனினும் வழங்கப்பட்ட பரிந்துரையை போக்குவரத்து அமைச்சு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட பெரும்பாலான கடுமையான விபத்துக்கள், 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பெற்ற சாரதிகளால் ஏற்பட்டவை என தெரியவந்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறித்த பரிந்துரையை செய்திருந்த போதும் அதனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ சான்றிதழ்களை பெற்ற பிறகு, பின்னர் சாரதிகளின் உரிமங்களை ரத்து செய்து, அந்த ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிமங்களை வழங்க முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகத்தால் முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் கடந்த அரசாங்கத்தின் பலமான நபரால் இந்த பரிந்துரை இடைநிறுத்தப்பட்டது.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையிலான திணைக்கள தலைவர்கள், எதிர்காலத்தில் இந்த ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, சமகால அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓட்டுநர் உரிமங்களைப் பெற்ற ஓட்டுநர்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்களாக இருக்கலாம் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இதுபோன்ற ஓட்டுநர்கள் விபத்துக்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
GettyImages 1202240221
செய்திகள்உலகம்

மார்ச் 20-ல் வெளியாகிறது புதிய BTS அல்பம் – உலகச் சுற்றுப்பயணத்திற்கும் தயார்!

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள தென் கொரியாவின் புகழ்பெற்ற கே-பாப் (K-pop) இசைக் குழுவான BTS,...

44520176 vijay33
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: த.வெ.க. தலைவர் விஜய்க்கு சி.பி.ஐ. அழைப்பாணை – ஜனவரி 12-ல் விசாரணை!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) பிரசாரத்தின் போது...

gold 5
செய்திகள்இலங்கை

தொடர்ந்து உயரும் தங்கம்: இன்றும் பவுணுக்கு 3,000 ரூபாய் அதிகரிப்பு – புதிய விலைப் பட்டியல் இதோ!

இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியான ஏற்றத்தைக் கண்டு வருகின்றது. நேற்று (05)...

1739116331 energy min
இலங்கைஏனையவைசெய்திகள்

மூன்று ஆண்டுகளில் 30% கட்டணக் குறைப்பு: நாடாளுமன்றத்தில் அமைச்சர் குமார ஜயகொடி உறுதி!

வாக்குறுதியளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைக்கும் இலக்கை நோக்கி அரசாங்கம்...