25 6843df00be801
இலங்கைசெய்திகள்

சிங்கப்பூரில் மறைந்துள்ள இலங்கை தமிழருக்கு எதிராக சர்வதேச ரீதியாக நடவடிக்கை

Share

ஊழல் ஒழிப்பு நாடான சிங்கப்பூர், மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்களை வழங்காவிட்டால், சர்வதேச மன்றங்களில் அதனை கேள்விக்குட்படுத்த முடியும் என உயர் நீதிமன்ற நீதியரசர் ரங்கா திசாநாயக்க கூறியுள்ளார்.

குறித்த கருத்தை அவர் நேற்று வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊழல் தொடர்பான குறியீட்டான சி.பி.ஐ குறியீட்டில், சிங்கப்பூர் மூன்றாவது இடத்திலும், இலங்கை 121வது இடத்திலும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக ஊழல்வாதிகளுக்கு எதிராக சர்வதேச சபைகளில் வாதங்களை முன்வைக்கமுடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், பொது அதிகாரிகள் செய்யும் அனைத்து செயல்களும் ஊழலாக கருதப்படுவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

எனினும், பொது அதிகாரிகள் செய்யும் எந்தவொரு செயலும் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தும் அல்லது வேறு தனி ஒருவருக்கு நன்மை பயக்கும் என்பதை அறிந்து வேண்டுமென்றே அல்லது தெரிந்தே செய்யப்பட்டால், அது ஊழலாகக் கருதப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சில சந்தர்ப்பங்களில், அரசின் சில பிரிவுகளை சட்டத்தின் எல்லைக்கு வெளியே பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது என்றும் விவாதித்துள்ளார்.

அத்தகைய நேர்மையான நோக்கத்துடன் செயல்படும் பொது அதிகாரிகள் பயப்படக்கூடாது எனவும் விளக்கியுள்ளார்.

கடந்த காலங்களில் இருந்து ஊழல் ஆதரவு நபர்களால் அரசாங்கம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது என்றும் ரங்கா திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...