25 6840592626631
இலங்கைசெய்திகள்

கோவிட் அச்சுறுத்தல் : திரும்பப் பெறப்பட்ட அரச பணியாளர்களுக்கான சுற்றறிக்கை

Share

அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களும், தங்கள் பணியாளர்களை முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்த வேண்டும் என்ற சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இன்று, மேல் மாகாண பிரதி தலைமைச் செயலாளர் பி.என். தம்மிந்த குமார வெளியிட்ட சுற்றறிக்கையே, திரும்பப் பெறப்பட்டுள்ளது.

சுற்றறிக்கை தொடர்பில், சமூக ஊடகங்களில், தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளதாக மேல் மாகாண தலைமைச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, இந்த சுற்றறிக்கை மேல் மாகாண சபை கட்டிடத்தில் அமைந்துள்ள மேல் மாகாண அமைச்சுகள் மற்றும் துறைகளின் ஊழியர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டதாக மேல் மாகாண தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள அனைத்து அரச ஊழியர்களும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்படவில்லை என்றும் தலைமைச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...