2 46
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் நடந்த பயங்கரம் – உயிருடன் எரிக்கப்பட்ட நபர்

Share

இரத்தினபுரி இறக்குவானை – ஹோரமுல பொது மயானத்தில் முச்சக்கர வண்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர், முச்சக்கர வண்டியுடன் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று மதிய வேளையில் நடந்த கொடூர சம்பவத்தை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், அந்த நபரை முச்சக்கர வண்டியின் முன் இருக்கையில் அமர வைத்து, கம்பிகளால் கட்டி, பின்னர் முச்சக்கர வண்டிக்கு தீ வைத்தமை தெரியவந்தது.

தீயில் சிக்கிய நபரின் உடல் முற்றிலுமாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் முச்சக்கர வண்டியும் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் குறித்து இறக்குவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
25 683bc7c6b9af4
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். முன்னாள்...

25 683beddc44bb5
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு..

ஜூன் மாதத்தில் தங்களது எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்...

4
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் ஐநாவின் உயர் அதிகாரி.. தொடர் அழுத்தத்தில் அநுர அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதம் அல்லது...

images
இலங்கைசெய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம்...