10 35
இலங்கைசெய்திகள்

புனித ஹஜ் பெருநாள் திகதியை அறிவித்துள்ள கொழும்பு பெரிய பள்ளிவாசல்

Share

புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப்பெருநாள் எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

துல்ஹஜ் மாதத்திற்கான தலைப்பிறை இன்று இலங்கையில் காணப்பட்டதனை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களிலும் துல்ஹஜ் மாதத்துக்கான தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதாரபூர்வமான தகவல் கிடைத்தமைக்கமைய, இன்று 29ஆம் திகதி துல்ஹஜ் மாதத்தின் முதலாம் நாள் ஆரம்பிக்கப்படுகிறது.

அதனடிப்படையில் துல்ஹஜ் மாதத்தின் 10ஆம் நாளான எதிர்வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை புனித ஹஜ்ஜுப்பெருநாள் கொண்டாடப்படும் என தீர்மானிக்கப்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.

அத்துடன் புனித அரபா தினம் துல் ஹஜ் 9ஆம் நாளான எதிர்வரும் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமையாகும்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...