images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

Share

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இவரது இறந்த நாள் முதல் குக் வித் கோமாளி புகழ் மற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார், இவரைப் போல பலரும் விஜயகாந்த் நினைவாக பலருக்கும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

நடிகர் விஜயகாந்த், ஒரு ஹோட்டலில் காபி விலை கேட்டு பெட்டியுடன் வெளியேறிய சம்பவம் குறித்து ஒரு பிரபலம் தற்போது ஷேர் செய்துள்ளார்.

விஜயகாந்த் நடித்த பல படங்களில் இணை தயாரிப்பாளராக பணியாற்றிய ராம வாசு ஒரு பேட்டியில், வாஞ்சிநாதன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜியில் நடந்து கொண்டிருந்தது.

அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரில் வேறு ஒரு ஹோட்டலில் நான் தங்கி இருந்தேன். காலை 6 மணி இருக்கும், அப்போது லுங்கியுடன் கையில் பெட்டியுடன் கேப்டன் வந்து கொண்டிருந்தார், என்ன சார் ஆனது என கேட்டேன்.

நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள் நானும் அங்கேயே வந்துவிடுகிறேன் என்றார். ஏன் என கேட்டதற்கு, அவன் ஒரு காபிக்கு ரூ. 80 போடுறான் பா, ரூ. 80க்கு காபி குடித்துவிட்டு என்ன பண்றது, நான் இங்கே வந்துவிடுகிறேன்.

இங்கே உள்ள காபியே போதும் என எங்களுடன் வந்து தங்கிவிட்டார் என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
newproject 2024 04 29t124643 635 1714375023
சினிமா

” விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கபடும்..! ” குட் பேட் அக்லி குறித்து தனுஷ் அப்பா பேச்சு..

அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘குட் பேட்...

17484429230
சினிமா

ரஜினிகாந்தின் “கூலி” திரைப்பட பட்ஜெட் இத்தனை கோடியா..?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது....

17484473210
சினிமாசெய்திகள்

ஆபத்தில் “thugh life”..கமல்காசன் பேச்சால் சர்ச்சை..! எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட மக்கள்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ,சிம்பு ,திரிஷா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் “thugh life” திரைப்படம்...

1 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி அநுரவின் திடீர் பதிவால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவு குறித்து மக்கள் மத்தியில் அதிகம்...