14 30
உலகம்செய்திகள்

கனடாவில் முதல் முறையாக AI அமைச்சர் நியமனம் – டிஜிட்டல் வளர்ச்சிக்கான புதிய முன்னெடுப்பு

Share

கனடாவின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சராக எவன் சாலமன் (Evan Solomon) நியமிக்கப்பட்டுள்ளார்.

2025 மே 13 அன்று, கனடா தனது வரலாற்றில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் புதுமை அமைச்சராக எவன் சாலமனை நியமித்துள்ளது.

ஒட்டாவாவில் உள்ள ரிடோ ஹாலில் நடைபெற்ற சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளும் விழாவில், ரொறன்ரோ சென்டர் தொகுதியைச் சேர்ந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினரான சாலமன் பதவியேற்றார்.

பிரதமர் மார்க் கார்னியின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்த புதிய அமைச்சகம், கனடாவை செயற்கை நுண்ணறிவில் உலகத் தரத்தில் முன்னிலை வகிக்க வைக்கும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது.

எவன் சாலமன், செயற்கை நுண்ணறிவு கொள்கை வடிவமைப்பு, தொழில்துறைகளில் AI பயன்பாட்டை ஊக்குவித்தல், மற்றும் தனியுரிமை, பாதுகாப்பு ஆகியவை ஆகியவற்றுக்கு சமநிலை ஏற்படுத்துதல் போன்ற பல முக்கிய பொறுப்புகளை ஏற்கிறார்.

தெற்கு ஒன்ராறியோவின் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் பொறுப்பாவார்.

சாலமனின் ஊடக அனுபவம் (CBC மற்றும் CTV-யில்) அவரை ஒரு திறமையான தகவல்தொடர்பாளராக மாற்றியுள்ளது.

மேலும், கனடாவிலேயே AI உள்கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்கள் – குறிப்பாக தரவகுப்பு மையங்கள் மற்றும் அதிவேக தகவல்தொடர்பு வளங்கள் AI துறையில் நாட்டின் பங்களிப்பை பாதுகாக்க உதவுகிறது.

இந்த புதிய அமைச்சகம், தொழில்நுட்பத்தில் கனடாவின் வரலாற்றிலேயே மைல்கல்லாக அமைகிறது.

Share
தொடர்புடையது
15 28
உலகம்செய்திகள்

ஒரு இரவில் 37,000 குடியுரிமை பறிப்பு – வளைகுடா நாடொன்றின் அதிர்ச்சி

குவைத்தில் ஒரு இரவில் 37,000 பேர் தங்கள் குடியுரிமையை இழந்துள்ளனர். குவைத் அரசு 37,000-க்கும் மேற்பட்ட...

13 28
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவை விட்டு வெளியேறிய இந்திய வம்சாவளி பில்லியனர்

பிரித்தானியாவில் வரிவிதிப்புகள் கடுமையானதால், தொழிலதிபர் ஷ்ரவின் மிட்டல் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளார். பிரித்தானிய அரசின்...

12 28
உலகம்செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தல் அறிக்கை… பாகிஸ்தானில் பயங்கர ஆயுதங்கள்: சீனாவிற்கு தொடர்பு

அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில் பாகிஸ்தான்...

11 29
உலகம்செய்திகள்

இந்தியாவின் தக்க பதிலடி… துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்

இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான...