10 30
இலங்கைசெய்திகள்

27ஆம் திகதி நள்ளிரவு வரை காலக்கெடு! தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை

Share

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்கள், வேட்பாளர்களை பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அதன்படி 2023ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க தேர்தல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்திற்கமைய தமது தேர்தல் பிரச்சார செலவின் விபரங்களை வேறுவேறாக தயாரித்து 27ஆம் திகதி நள்ளிரவு 12 மணி அல்லது அதற்கு முன்னர் உள்ளூர் அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட https://cf.slestions.gov.lk/ இணைய இடையிணைப்பியிலும் பிரவேசித்து பதிவு செய்து கொண்ட பின்னர் அந்த இணையதளத்திற்கு தமது தேர்தல் விபரத்திரட்டுக்களை பதிவேற்றம் செய்யக்கூடிய வகையில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் இக்காலத்துள் அவற்றை ஒப்படைக்க முடியாதிருப்பின், 27ஆம் திகதிக்கு முன் வேட்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் தலைவர்கள் போட்டியிட்ட உள்ளூர் அதிகார சபைகளின் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்பிவைப்பதற்கும் வாய்ப்புள்ளது.

2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேரதல் செலவினத்தை ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின் ஆம் பிரிவிற்கமைய 27ஆம் திகதி நள்ளிரவு 12 மணி அல்லது அதற்கு முன்னர் தேர்தல் விபரத்திரட்டுக்களை ஒப்படைக்காதிருப்பதன் ஊடாக சட்டவிரோதமான செயலொன்றைப் புரிந்தவராகக் கருதி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
images 23
செய்திகள்இலங்கை

கொட்டாஞ்சேனைக் கொலைச் சம்பவம்: ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் துப்பாக்கிதாரி கைது – 72 மணி நேர தடுப்புக் காவலில் விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரைக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி, ‘ஐஸ்’...

image 17
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்கள் அதிரடி உயர்வு: வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

வெளிநாட்டவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) வழங்குவதற்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. போக்குவரத்து,...

MediaFile 14
செய்திகள்இலங்கை

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.00 –...

20250719 124156
செய்திகள்இலங்கை

இந்திய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அழைப்பு: சுற்றுலா மற்றும் திரைப்படத் திட்டங்களில் ஒத்துழைக்க விஜித ஹேரத் வலியுறுத்தல்!

நாட்டில் புதிய சுற்றுலா முயற்சிகள் மற்றும் திரைப்படத் திட்டங்களை ஆராய்வதற்காக இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் திரைப்படத்...