7 27
உலகம்செய்திகள்

ஈழத்தமிழர் விவகாரத்தில் பிரித்தானியா – கனடாவிடம் புலம்பெயர் தமிழர்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

Share

ஈழத்தமிழர்களுக்கு தமது தாயகத்தில் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் வாழும் தீர்வுக்காக பொது வாக்கெடுப்பை நடத்த பிரித்தானியா, கனடாவும் மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் முன்வர வேண்டும் என புலம்பெயர் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு நிறைவுதினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18ஆம் திகதி உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்படுகின்றது.

இந்நாளையொட்டி தமிழர் பரப்பிலும் உலகலாவிய ரீதியிலும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இந்த ஆண்டும் பிரித்தானியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், சுவிஸ் உட்பட பல நாடுகளில் நீதிக்கான பேரணிகள் இடம்பெற்றிருந்தன.

பிர்த்தானியாவில் கடந்த 18ஆம் திகதி அன்று முள்ளிவாய்க்கால் மற்றும் யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காக நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட பேரணியில் பல நூற்றுக்கணக்கான புலம்பெயர் மற்றும் உலகத் தமிழர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கையில் இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் நிரந்தர தீர்வையும் வலியுறுத்திய கோரிக்கைகளை பேரணியில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர்.

பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உட்பட சர்வதேச நாடுகள் ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் நீதியை பெற்றுக்கொடுக்கும் செயல்பாட்டில் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்றும் பேரணியில் கலந்துகொண்ட தமிழர்கள் வலியுறுத்தினர்.

அதேவேளை, கடந்த சில நாட்களாக இனவழிப்பை மறைத்து நீதியை மழுங்கச் செய்யும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கு தமது கண்டனத்தையும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
image 172a2f580a
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியின் அந்நியச் செலாவணி நிலைத்தன்மைக் கூற்றுக்கு ஆதாரமில்லை: புபுது ஜெயகொட குற்றச்சாட்டு!

இலங்கையின் இறக்குமதிகள் அதன் ஏற்றுமதி வருவாயை விட அதிகமாக வளர்ந்துள்ளதால், நாட்டின் செலுத்துமதி சமநிலை பற்றாக்குறை...

25 690d6d53c26d1
செய்திகள்அரசியல்இலங்கை

விலங்கு நலனுக்கு நிதி ஒதுக்கி, மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறிவிட்டது – வைத்தியர் சமல் சஞ்சீவ கடும் விமர்சனம்!

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026ஆம்...

25 690b4dc55879b
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது குறித்துப் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவெடுப்போம்: ரெலோ அறிவிப்பு!

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் (Tamil National Alliance – TNA) செயற்படுவது தொடர்பில், பங்காளிக்...

l78020250411143138 1296x700 1
செய்திகள்உலகம்

சீனா-அமெரிக்கா வர்த்தகப் பதற்றம் தணிப்பு: முக்கிய உலோகங்கள் மீதான ஏற்றுமதி தடை தற்காலிக நீக்கம் – கிராஃபைட் கட்டுப்பாடுகளும் நிறுத்தம்!

சீனா, அமெரிக்காவுக்கான முக்கிய உலோகங்கள் மீதான தனது ஏற்றுமதித் தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இந்த நடவடிக்கை,...