4 26
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தொழிலாளர்ளுக்கு மகிழ்ச்சி செய்தி: அதிகரிக்கவுள்ள சம்பளம்

Share

இலங்கையின் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 27,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றையதினம்(21.05.2025) வெளியிடப்பட்டது.

அத்துடன், குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறைந்தபட்ச தினசரி சம்பளம் 1,800 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு 3ஆம் இலக்க தொழிலாளர்களின் தேசிய குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் 3ஆம் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 01ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 9,500 ரூபாவாலும் குறைந்தபட்ச தினசரி சம்பளம் 380 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த வருடம் ஜனவரி 01ஆம் திகதி முதல், குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை 3,000 ரூபாவாலும் குறைந்தபட்ச தினசரி சம்பளம் 120 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல், அனைத்து துறைகளிலும் பணிபுரியும் ஊழியர்களின் குறைந்தபட்ச மாதாந்த சம்பளம் 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6912189d45e01
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் ரெலோ ஊடக சந்திப்புப் புறக்கணிப்பு: சர்ச்சைக்குரிய குரல் பதிவு விவகாரம் – நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக வெளியேற்றம்!

ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை...

image 3268f37140
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

மன்னார் காற்றாலைத் திட்ட எதிர்ப்புப் போராட்டம் 100ஆவது நாளை எட்டியது: வாழ்வுரிமைச் சாத்வீகப் போராட்டம் தீப்பந்த எழுச்சிப் போராட்டமாக மாற்றம்!

மன்னார் தீவில் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் மக்களின் வாழ்வுரிமைச் சாத்வீகப்...

1762822905 Sri Lanka Pakistan SLC PCB ICC Ada Derana 6
செய்திகள்விளையாட்டு

பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது ராவல் பின்டியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் பவன் ரத்னாயக்க, கமில் மிஷார, லஹிரு உதார ஆகியோரில் ஒருவருக்கு...

image 7d9f309897
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் தலாவவில் பஸ் விபத்து: உயர்தரப் பரீட்சை மாணவர்கள் உட்படப் பலர் காயம் – ஒருவர் பலி!

அனுராதபுரம், தலாவ ஜயகங்க சந்தியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே...