24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

Share

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த நேரத்தில், உயிர்காக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கடும் போராட்டத்தின் பின்னர் அவர்களை காப்பாற்றியுள்ளனர்.

மீட்கப்பட்டவர்களுக்கு அடிப்படை மருத்துவ சிகிச்சையும் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

கடலில் அடித்து செல்லப்பட்ட ஆண் 31 வயது பங்களாதேஷ் நாட்டவர் எனவும் காயமடைந்த பெண் 20 வயது சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பாற்றப்பட்ட இரண்டு சுற்றுலா பயணிகளும் உடல் நலத்துடன் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
30 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த மனைவி நடந்தது என்ன…! தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து...

29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2...

28 11
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டமைக்காக காரணம் வெளியானது!

பிரித்தானியாவின் ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட், கட்டுநாயக்கவில் இயங்கி வந்த தமது தொழிற்சாலையை, திடீரென மூடியமைக்கான...

27 11
இலங்கைசெய்திகள்

மகிந்த – கோட்டாபய சகாக்களுடன் அநுர தரப்பு பேச்சுவார்த்தை

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருடன் ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுடன்...