15 22
இலங்கைசெய்திகள்

படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழு

Share

படலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. நான்கு பேரைக் கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிரேஸ்ட மேலதிக சொலிசுட்டர் ஜெனரல் ரொஹான்த அபேசூரியவின் தலைமையில் இந்தக் குழு செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதி சொலிசுட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், அரசாங்க சிரேஸ்ட சட்டத்தரணி ஜயனி வேகடபொல மற்றும் அரச சட்டத்தரணி சக்தி ஜயகொடராச்சி ஆகியோர் இந்த குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

படலந்த குழு அறிக்கையின் சாட்சியங்கள் ஊடாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய முடியுமா என இந்த குழு ஆராய உள்ளது.

மேலும் தொடர்ந்தும் விசாரணை செய்யப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இந்த குழு கவனம் செலுத்த உள்ளது.

88-90ம் ஆண்டுகளில் படலந்த வீதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் படலந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...