13 21
இலங்கைசெய்திகள்

பெருந்தொகை டொலரை பெற்றுக்கொள்ளவதில் இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Share

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தொகையான 344 மில்லியன் டொலரை பெற இன்னும் பல மாதங்களுக்கு தாமதமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அடிப்படை நிபந்தனைகளை இலங்கை அரசாங்கம் இதுவரை பூர்த்தி செய்யாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடன் உடன்படுவதால், அந்த நாடுகள் மற்றும் அமைப்புகள் வழங்கும் உதவிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு கண்டிப்பாக கட்டுப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரத் திட்டத்திற்கு வழங்கப்படவுள்ள வரிச் சலுகைகளை நீக்குவது தொடர்பான நிபந்தனை குறித்து சீனத் தூதரகம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

வரிச் சலுகைகள் நீக்கப்பட்டால், எதிர்காலத்தில் நாட்டில் சீன முதலீடுகள் தொடர்பாக அந்நாடு கடுமையான முடிவை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவையும், இலங்கை விமான போக்குவரத்து நிறுவனம் மற்றும் மின்சார சபை உள்ளிட்ட நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை மறுசீரமைக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றன.

Share
தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...