23 11
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சியால் பரபரப்பான நிலைமை

Share

இலங்கையின் ஒரு முக்கியமான உள்ளூராட்சி நிறுவனமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல் கட்சிகள் தங்கள் அதிகபட்ச பலத்தை பயன்படுத்தி வருகின்றன.

அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை ஈர்க்க இரகசிய பேச்சுவார்த்தைகளும் இந்நாட்களில் இடம்பெற்று வருகின்றனர்.

அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக பல்வேறு சலுகைகள் மற்றும் வசதிகளை உறுதியளித்து எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஈர்க்க பல கட்சிகள் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் துணை மேயருக்கான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 2 ஆம் திகதி நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய சூழ்நிலையில், இந்தத் வாக்கெடுப்பு மிகவும் பரபரப்பான திருப்பத்தை எடுக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

எந்தவொரு கட்சியும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெறாததால், மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்களை வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

கொழும்பு மாநகர சபையின் நிர்வாக அதிகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், எதிர்க்கட்சி பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டிருப்பதால், ஆட்சி அதிகாரத்தை பெற உரிமை உண்டு என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
27 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எண்ணெய் மற்றும் தேங்காய் விலை உயர்வு: பேக்கரி மற்றும் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பு!

உள்நாட்டுச் சந்தையில் பாம் ஒயில் (Palm Oil) மற்றும் தேங்காய் உள்ளிட்ட அத்தியாவசிய எண்ணெய் பொருட்களின்...

26 6
செய்திகள்உலகம்

மைக்கேல் ஜாக்சன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்: எஸ்டேட் மற்றும் காசியோ குடும்பத்தினரிடையே சட்டப் போர் தீவிரம்!

மறைந்த பாப் இசை மேதை மைக்கேல் ஜாக்சன் மீது, ஃபிராங்க் காசியோ மற்றும் அவரது உடன்பிறப்புகள்...

25 6
செய்திகள்உலகம்

உலகின் வலிமையான ‘T1200’ கார்பன் ஃபைபரை அறிமுகப்படுத்தியது சீனா: விண்வெளித் துறையில் புதிய மைல்கல்!

சீனா தனது உள்நாட்டுத் தயாரிப்பான T1200-தரத்திலான அதி-உயர்-வலிமை கார்பன் ஃபைபரை புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அரசுக்குச்...

24 9
செய்திகள்உலகம்

சீனாவின் புதிய ‘இன ஒற்றுமை’ சட்டம்: சிறுபான்மையினரின் கலாச்சார அடையாளத்திற்கு அச்சுறுத்தலா?

சீனா அண்மையில் “இன ஒற்றுமையை” மேம்படுத்துவதாகக் கூறி புதிய சட்டமொன்றை அங்கீகரித்துள்ளது. ஹான் சீனர்களின் ஆதிக்கம்...