26 9
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொலை மிரட்டல்

Share

தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகங்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த 14ஆம் திகதி பெயர் குறிப்பிடப்படாத கடிதம் ஒன்றின் மூலம் எனக்கு கொலை மிரட்டல் வந்தது.

குறித்த கடிதத்தில், மதவாச்சி மற்றும் கெபிதிகொல்லாவ பிரதேச சபைகள் தொடர்பாக, மேலும் அரசியல் நடவடிக்கை எடுக்கவோ அல்லது அதிகாரத்தைப் பெற முயற்சிக்கவோ வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், இரண்டு உள்ளூராட்சி மன்றங்களும் ஏற்கனவே நிறுவப்பட்டதாகவும் மேற்கொண்டு முயற்சித்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த கடிதம் முத்திரை இன்றி வந்துள்ளது. எனவே, தபால் அதிகாரி ஒருவரின் உதவி இன்றி இதனை செய்திருக்க முடியாது.

இது தொடர்பில் நான் பொலிஸாரிடமும் முறைப்பாடு செய்துள்ளேன். கடந்த காலங்களில், குறிப்பாக எங்களின் சிறுவயது பராயத்தில் இவ்வாறான மிரட்டல் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே இன்று ஆட்சியில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...