32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

Share

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அமைப்பது தொடர்பில் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் செயற்படப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மையான மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை பலமில்லாத உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை குழப்பும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழு மாத காலத்தில் பொதுஜன முன்னணியின் வாக்கு பலம் 300 வீதமாக அதிகரித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டை நேசிக்கும் மக்கள் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...

29 6
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது....