நடிகை தீபிகா படுகோன் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் பிரபலமான நடிகை. அவர் ஹாலிவுட் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
அவர் பிரபாஸ் உடன் கல்கி 2898 AD படத்தில் நடித்து இருந்தார். அதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஸ்பிரிட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
குழந்தை பெற்ற பிறகு தீபிகா படுகோன் நடிக்கும் பெரிய படம் இதுதான். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஸ்பிரிட் படத்திற்காக தீபிகா படுகோன் வாங்கும் சம்பளம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
அவர் 20 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறாராம். தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ஹிந்தியில் நடித்த ஜவான் படத்திற்கே 10 கோடி தான் சம்பளமாக பெற்றார்.
தீபிகா படுகோன் 20 கோடி பெறுவதன் மூலம் நாட்டிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக மாறி இருக்கிறார்.