4 18
இலங்கைசெய்திகள்

உப்பு தட்டுப்பாட்டுக்கு அமைச்சரவையை குற்றம் சுமத்தும் உற்பத்தியாளர்கள்

Share

உப்பை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை முடிவை செயற்படுத்துவதில் ஏற்பட்ட தாமதமே, நாடளாவிய ரீதியில் தற்போது ஏற்பட்டுள்ள உப்பு தட்டுப்பாட்டுக்கான காரணம் என்று, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் நேற்று குற்றம் சாட்டியுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 26 அன்று 30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்வதற்கான திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், இன்றுவரை உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை. எனவே தற்போது நிலவும் பற்றாக்குறை, இறக்குமதி செய்யப்படும் உப்பு, இலங்கைக்கு வந்தவுடன் முடிவுக்கு வந்துவிடும் என்று இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இறக்குமதி உப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், அது நிகழவில்லை என்று கனக அமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், நாட்டில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக உள்ளூர் உற்பத்தியில் ஏற்பட்ட சரிவும் இதற்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், இறக்குமதி உப்பு இருப்புக்கள் எதிர்வரும் நாட்களில் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

இதற்கு மத்தியில் சந்தையில் தற்போது ஒரு கிலோ உப்பு 400க்கும் அதிகமான விலையில் விற்பனையாகிறது.

 

Share
தொடர்புடையது
Dr. Nalinda Jayathissa 2024.08.23 1
செய்திகள்இலங்கை

ஏற்றுமதி கஞ்சா திட்டம்: ‘உள்ளூர் சந்தையில் நுழைய வாய்ப்பில்லை; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ – அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ!

இலங்கையில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக முதலீட்டு மண்டலங்களில் (Investment Zones) மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர்ச்செய்கை திட்டம் தொடர்பான...

crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...