5 18
இலங்கைசெய்திகள்

நீண்டதூரப் போக்குவரத்து சாரதிகள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானம்

Share

நீண்ட தூரப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து சாரதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தவுள்ளதாக மோட்டார் ​போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் றம்பொடை, கெரண்டி எல்ல அருகே நடைபெற்ற பேருந்து விபத்தின் பின்னர் இந்த விடயம் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டியதன் அவசியம் எழுந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

விபத்துக்குள்ளான கதிர்காமம்-குருநாகல் வழித்தடமானது நீண்ட நேரம் கொண்ட ஒரு போக்குவரத்து வழித்தடமாகும்.

அவ்வாறான வழித்தடங்களில் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் சாரதிகளுக்கு போதுமான ஓய்வு கிடைக்கின்றதா? ஒழுங்கான தூக்கம் கிடைக்கின்றதா? பயணத்தின் இடையில் அவர்களுக்கு சிறிதளவேனும் ஓய்வொன்றை எடுப்பதற்கான வசதிகள் உள்ளதா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியிருப்பதாக கமல் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இரவுநேரப் பயணிகள் போக்குவரத்துச் சேவைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 12
சினிமாசெய்திகள்

ஷங்கர் – விக்ரம் சந்திப்பு..! கூட்டணி இணைய வாய்ப்புள்ளதா..?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர் ஷங்கர் சமீபத்தில் இயக்கிய அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல...

17512685620
இலங்கைசெய்திகள்

அரசியலில் என்ட்ரியா..! ரஹ்மான் இணை அமைச்சரை சந்தித்ததன் பின்னணி என்ன..?

இந்திய சினிமாவின் இசைமேதை, இசையின் உலகநாயகர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் மத்திய இணை அமைச்சர் எல்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 11
சினிமாசெய்திகள்

சினிமாவுக்கு வெளியேயும் தல சாம்பியன் தான்..! அஜித் ரேஸிங் அணிக்கு கிடைத்த வெற்றி மகுடம்..!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக மட்டுமல்லாது கார் ரேஸராகவும் மக்களை ஆச்சரியப்படுத்துபவர் தான் நடிகர் அஜித்...

17512832932
சினிமாசெய்திகள்

சினிமா துறையில் போதைப்பொருள் குறித்த பின்னணி!நேர்காணலில் பைல்வான் ரங்கநாதன் கருத்து!

தமிழ் சினிமா துறையில் இடம்பெற்றுள்ள போதைப்பொருள் தொடர்பான அண்மைய சம்பவங்கள், சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன....