12 15
உலகம்செய்திகள்

40 ஆண்டு ஆயுதப்போராட்டதை கைவிடும் குர்திஸ் கிளர்ச்சியாளர்கள்

Share

துருக்கியின் அரசாங்கங்களுக்கு எதிராக, 40 ஆண்டு காலமாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள், தமது ஆயுத போராட்டத்தை கைவிட்டு, அமைதி வழியில் திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளனர்.

குர்தீஸ் தொழிலாளர் கட்சி அல்லது பி.கே.கே., என கூறிக் கொள்ளும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள், 1984ல் இருந்து ஆயுதப்போராங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், குர்திஸ் குழுவை பயங்கரவாத அமைப்பாக கருதி துருக்கி மற்றும் மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன.

அந்தக்குழுவின் தலைவர் அப்துல்லா ஒக்லான், 1999ல் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.எனினும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள் குழு தமது போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.

சிறையில் இருக்கும் அப்துல்லாவை, அண்மையில் துருக்கி அரசியல் தலைவர்கள் சந்தித்து, வன்முறையை கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதை தொடர்ந்து கடந்த மார்ச்சில் போர் நிறுத்தத்தை குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். இந்தநிலையிலேயே ஈராக்கில் நடந்த நிகழ்வு ஒன்றில், குர்தீஸ் தொழிலாளர் கட்சி, தமது ஆயுதப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அரசியலை முன்னெடுத்து, துருக்கியுடன் அமைதி வழியில் குர்தீஸ் இன மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று குர்திஸ் கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...