16 13
உலகம்செய்திகள்

பல ஆண்டுகளாக அணையாமல் எரியும் நரக வாசல் : எங்குள்ளது தெரியுமா?

Share

இந்த உலகில் வாழும் மக்களுக்கு “நரகம்” பற்றி நம்பிக்கை உள்ளது. பொதுவாக பாவம் செய்தவர்கள் இறந்த பின்னர் நரகத்திற்கு செல்வார்கள் என நம்பப்படுகிறது.

ஆனால் பூமியில் தான் நரகத்திற்கான வாசல் உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கும் இந்த தீயை யாராலும் அணைக்க முடியாது என கூறப்படுகிறது.

அணையாத நெருப்பு காரணத்தினால் இந்த இடத்தை “நரகத்தின் வாசல்” என அழைக்கிறார்கள்.

ஆய்வுகளின் படி, நரகத்திற்கும் இந்த இடத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை. இடைவிடாத நெருப்பு காரணமாகவே இந்த இடம் நரகத்தின் வாசல் என அழைக்கப்படுகிறது.

அந்த வகையில் சொர்க்கத்தின் வாசலில் எங்குள்ளது? நெருப்பு ஏன் அணையாமல் இருக்கிறது? என்பதனை பதிவில் பார்க்கலாம்.

பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் புதைந்து கிடக்கும் அபாயங்களையும், ஆபத்துக்களையும் வெளிப்படுத்துகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு மக்களை அச்சமடைய வைக்கிறது.

கடந்த 1971 ஆம் ஆண்டு, சோவியத் பொறியாளர்கள் துர்க்மெனிஸ்தானின் பாலைவனத்தில் இயற்கை எரிவாயு எங்குள்ளது என தேடிக்கொண்டிருக்கும் பொழுது அழிவு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி எரிவாயு நீர்த்தேக்கத்தை துளைத்து விட்டதால் தரையில் இருந்து சுமார் 230 அடி அகலமும் 100 அடி ஆழமும் கொண்ட ஆழமான பள்ளமாக உருவாகியுள்ளது.

இதையடுத்து மீத்தேன் வாயு உடனடியாக காற்றில் கசிய தொடங்கி, நச்சுப் புகை காற்றுடன் கலந்து தீயாக மாறியுள்ளது.

இந்த நரகத்தின் வாசல் பார்ப்பதற்கு ஆபத்தாக இருந்தாலும் துர்க்மெனிஸ்தானின் மிகவும் பிரபலமான ஈர்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது ஆண்டுதோறும் சுமார் 10,000 பார்வையாளர்கள் வந்து பார்வையிடுகின்றனர்.

தீப்பிழம்பு நிறைந்த குழி பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் தெரியும். அதிலும் குறிப்பாக இரவில் பாலைவனம் முழுவதும் ஒரு பயங்கரமான ஒளியை பரப்பும்.

Share
தொடர்புடையது
Harini 1200x675px 26 03 25 1000x600 1
செய்திகள்இலங்கை

பல்கலைக்கழகப் பேராசிரியர் மீதான பாலியல் துன்புறுத்தல் புகார்: முறையான விசாரணை நடக்கிறது – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

வயம்பப் பல்கலைக்கழகத்தில் (Wayamba University) பேராசிரியர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை வலுக்கட்டாயமாகத் தடுத்து...

25 690903a432341
செய்திகள்இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: மங்கோலியாவில் அவசரமாகத் தரையிறங்கியது! 

சான் பிரான்சிஸ்கோவிலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா (Air India) விமானம் ஒன்று, தொழில்நுட்பக்...

25 69090d80f023d
செய்திகள்உலகம்

தென்சீனக் கடல் பதற்றம்: சீனாவுக்கு எதிராக கனடா, பிலிப்பைன்ஸ் இடையே முக்கியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

தென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நோக்கில், கனடாவும் பிலிப்பைன்ஸும் ஒரு முக்கியமான பாதுகாப்பு...

25 6909005a2a5b7
செய்திகள்உலகம்

பிணைக்கைதிகள் உடல்கள் ஒப்படைப்பைத் தொடர்ந்து: 45 பலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் விடுவித்தது! 

ஹமாஸிடமிருந்து மூன்று இஸ்ரேலியப் பிணைக்கைதிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை ஒப்படைத்துள்ளதாக...