30 2
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் முறுகலை உன்னிப்பாக கவனிக்கும் இலங்கை

Share

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் பதற்ற நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் சூழ்நிலையின் வளர்ச்சி குறித்து வெளியுறவு அமைச்சகம் விழிப்புடன் உள்ளதோடு இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு விளக்கமும் அளித்து வருகின்றது.

அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்தின்படி, இந்தியப் பெருங்கடலில் புவிசார் அரசியல் மோதல்களில் இலங்கை ஈடுபடாது.

அத்துடன், நாங்கள், எங்கள் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், அணிசேரா கொள்கையில் செயற்படுகிறோம்.

எந்தவொரு வகையான பயங்கரவாதத்தையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ மாட்டோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில் எந்த நேரத்திலும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...