4 8
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை இழக்குமா அநுர தரப்பு..! வியூகம் வகுக்கும் சஜித்

Share

நாடு முழுவதும் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஆளும் கட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் சிக்கல் நிலையை எதிர்நோக்கியுள்ளது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 94 மன்றங்களில் பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

ஏனைய மன்றங்களில் கூட்டணி மூலம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, எதிர்க்கட்சியும் நெருக்கமான பெறுபேறுகளை பெற்றுள்ள நிலையில் அவர்களும் கூட்டணி அமைப்பதற்கான பேச்சவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதில் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பு மாநகர சபையில் முழுமையான பெரும்பான்மையைப் ஆளும் தரப்பினால் பெற முடியவில்லை என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதாவது, எதிர்க்கட்சி ஒன்றுபட்டால், தேசிய மக்கள் சக்தி நகராட்சியின் பொறுப்பை ஏற்பதைத் தடுக்க முடியும்.

முஜிபுர் ரஹ்மானின் பேஸ்புக் பதிவின் படி தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் எதிர்கட்சிகள் 69 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...