4 5
இலங்கைசெய்திகள்

வாகன விற்பனை நிலைய உரிமையாளரிடமிருந்து அரச ஆவணங்கள் மீட்பு

Share

தனியார் வாகன விற்பனை நிலையமொன்றின் உரிமையாளரிடமிருந்து வாகனங்கள் தொடர்பான பெருமளவான அரச ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குருநாகல் பிரதேசத்தின் வாரியபொல நகரில் இடம்பெற்றுள்ளது.

அங்குள்ள தனியார் வாகன விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவர் , மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனங்கள் பதிவு செய்தல், உரிமையை மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களைத் தம் வசம் வைத்திருந்துள்ளார்.

அதனைக் கொண்டு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களைப் பதிவு செய்தல், உரிமை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வந்துள்ளார் .

அத்துடன் கடந்த 2017ஆம் ஆண்டு அவர் சட்டவிரோதமாக இறக்குமதி செய்துள்ள மொண்டரோ ரக வாகனமொன்றை 2002ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட லொறியொன்றின் பதிவை பயன்படுத்தி வாகனத்துக்கான இலக்கத்தகடு பெற்றுக் கொண்டுள்ளார்.

இவ்வாறு பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடைய குறித்த வர்த்தகரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய நிலையில், எதிர்வரும் 09ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...