18 3
இலங்கைசெய்திகள்

அநுர அரசிலும் தொடரும் அதிகார துஷ்பிரயோகம் – கட்சியால் ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Share

சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சிக்காலத்திலும் அதிகார துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் நிறுத்தப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் விவாதித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய நெடுஞ்சாலை பொலிஸ் அதிகாரிகள் குழு மீது விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மே தின பேரணிகளில் பங்கேற்ற மக்களை ஏற்றிச் சென்ற சுமார் 20 பேருந்துகள் பாதுகாப்பற்ற முறையில் குருந்துகஹஹெதப்ம பகுதியில் நிறுத்தப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த செயற்பாடு தொடர்பில் பொலிஸ் கண்காணிப்பாளர் அனுராத மஹிந்தசிறி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பாதுகாப்பற்ற முறையில் பேருந்துகளை நிறுத்த அனுமதித்த பல பொலிஸ் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் பயணித்த மக்களின் செயற்பாடு கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

பேருந்துகளை நிறுத்தி, உணவருந்தியதுடன், மது அருந்தும் செயற்பாடுகளில் ஈடுபட்ட காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன.

இந்த முறையில் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவது மிகவும் ஆபத்தான சூழ்நிலை எனவும் இந்த நடைமுறையை நிறுத்தத் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து பொலிஸதார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...