6 3
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்ப் உள்ளக நிர்வாகத்தில் முதல் சறுக்கல்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகல்

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ்(Michael Waltz) தனது பணியில் இருந்து விலகக் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று சர்வதேச செய்தி ஒன்று கூறுகிறது.

இது, 2025 ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரது உள்ளக அரசியலில் ஏற்பட்ட முதல் பெரிய மாற்றமாகும்.

வோல்ட்ஸின் துணை அதிகாரியும், ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் வட கொரியாவை மையமாகக் கொண்ட வெளியுறவுத்துறை அதிகாரியுமான ஆசிய நிபுணருமான அலெக்ஸ் வோங்கும் தனது பதவியை விட்டு விலகுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

புளோரிடாவைச் சேர்ந்த 51 வயதான முன்னாள் குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினரான வோல்ட்ஸ், கடந்த மார்ச் மாதத்தில் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு உதவியாளர்களிடையே, ஊழல் ஒன்றில் சிக்கிய நிலையில், வெள்ளை மாளிகைக்குள் விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்த நிலையில் வோல்ட்ஸிடமிருந்து அந்த பதவியை யார் பொறுப்பேற்பார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால், ரஸ்யா- உக்ரைன் ராஜதந்திரத்திலும் மத்திய கிழக்கிலும் ஈடுபட்டுள்ள அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒரு சக்திவாய்ந்த பதவியாகும் எனினும், அந்த பதவிக்கு செனட் உறுதிப்படுத்தல் அவசியம் இல்லை.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...