12 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞன்

Share

மாத்தறை, வெலிகமவில் பகுதியில் பேருந்து ஒன்றில் பயணி ஒருவர் மறந்துவிட்டு சென்ற பயணப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் ரூபாய் பணத்துடனான பையை கண்டெடுத்த இளைஞன், அதனை உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

அளுத்கம பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரிந்த ஒருவர், வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக மாத்தறை-கொழும்பு பேருந்தில் ஏறி, பின்னர் ரத்கம பகுதியில் இறங்கியிருந்தார்.

அப்போது அவரிடம் இருந்த கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கொண்ட பணப்பை அவர் பயணம் செய்த பேருந்தில் மறந்து விட்டு சென்றுள்ளார்.

இதனை அவதானித்த பேருந்தில் பயணித்த இளைஞர் ஒருவர் அதனை பெற்று, அது குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.

பின்னர், பணப் பையின் உரிமையாளரை தொலைபேசி அழைப்புகள் மூலம் கண்டுபிடித்த இளைஞன் உரிமையாளரின் அடையாளத்தை உறுதிசெய்து, அதனை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த முன்மாதிரியான செயலுக்காக பணப் பையின் உரிமையாளர் அந்த இளைஞருக்கு பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கியுள்ளார்.

எனினும் அந்த இளைஞன் அதை மறுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பண நெருக்கடியாக காலத்தில் இவ்வாறான இளைஞனின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...