22
உலகம்செய்திகள்

ஆயிரம் கோடிக்கு சொந்தக்கார நடிகர்: பட்டினி கிடந்ததாகக் கூறும் உடற்கூறு ஆய்வறிக்கை

Share

80 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் கொண்ட பிரபல நடிகர் ஒருவர், நீண்ட நாட்களாக சாப்பிடாமல் பட்டினியாக இருந்துள்ளார் என்பது அவரது உடற்கூறு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

பிரபல நடிகரான ஜீன் ஹாக்மேனும் (Gene Hackman, 93), அவரது மனைவியான பெற்சியும் (Betsy Arakawa, 63), அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்திலுள்ள Santa Fe என்னுமிடத்தில் வாழ்ந்துவந்த நிலையில், பிப்ரவரி மாதம், அவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.

இந்நிலையில், ஜீன் ஹாக்மேனின் உடற்கூறு ஆய்வறிக்கையில், அவரது உடலில் அசிட்டோன் என்னும் வேதிப்பொருள் 5.3 mg/dl இருப்பது தெரியவந்துள்ளது.

ஒருவர் நீண்ட நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்தால்தான் அவரது உடலில் இந்த அளவுக்கு அசிட்டோன் இருக்குமாம்.

ஆக, ஜீன் நீண்ட நாட்களாக உணவு உட்கொள்ளாமல் இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு வேறு பல உடல் நலக்குறைவுகளும் உள்ளது உண்மைதான் என்றாலும், 80 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான சொத்துக்கள் கொண்ட ஜீன், கடைசியில் உணவு கூட இல்லாமல் உயிரிழந்துள்ளார் என்னும் தகவல் சோகத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

80 மில்லியன் டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 23,96,64,08,000.00 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...