4 2
உலகம்செய்திகள்

முத்துராஜாவை இலங்கைக்கு திருப்பியனுப்பப் போவதில்லை: தாய்லாந்து மன்னரின் தீர்மானம்

Share

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பில் இருந்தபோது தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட முத்துராஜா என்ற யானையை இலங்கைக்குத் திருப்பி அனுப்பப் போவதில்லை என்று தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

குறித்த யானைக்கு ஏற்பட்டிருந்த பல காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், அது இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் என்ற உறுதிமொழியுடன், 2023 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து முத்துராஜா தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது, தற்போது குறித்த யானை இப்போது முழுமையாக குணமடைந்துள்ளது.

எனினும், அதனை திருப்பியனுப்புவதில்லை என்று தாய்லாந்தின் மன்னர் தீர்மானித்துள்ளதாக, இலங்கை தேசிய மிருகக்காட்சிசாலையின் இயக்குநர் சந்தன ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு, தெஹிவளை தேசிய விலங்கினச்சாலையை சேர்ந்த மருத்துவக் குழு, யானையின் நிலையை அறிந்துக்கொள்வதற்காக, தாய்லாந்து அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அந்த நாட்டுக்கு சென்றது.

அந்த நேரத்தில், தாய்லாந்து அதிகாரிகள் குழுவினர், யானை நன்றாக குணமடைந்து வருவதாக இலங்கை குழுவிடம் தெரிவித்திருந்தனர்.

அந்த யானையின் சிகிச்சைக்காக தாய்லாந்து அரசாங்கம் 200 மில்லியன் இலங்கை ரூபாய்களை செலவிட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், முத்துராஜா யானையை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று நாட்டின் மன்னர் முடிவு செய்துள்ளதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

அளுத்கமவில் உள்ள விஹாரை ஒன்றின்; பராமரிப்பில் இருந்தபோது, சுமார் 12 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த குறித்த யானை, தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்படுவதற்கு முன்னர் வரை, கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்தே 2001 இல் அதனை அன்பளிப்பாக வழங்கிய தாய்லாந்து அரசாங்கம், 2023 ஜூலை 2 ஆம் திகதியன்று சிகிச்சைக்காக, தாய்லாந்துக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.

Share
தொடர்புடையது
world 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மறுசீரமைப்பு: தனியார்மயமாக்கல் குறித்து அரசாங்கம் இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை!

தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கு (SriLankan Airlines) புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்ற கொள்கை...

world 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாதுகாப்பான புத்தாண்டு கொண்டாட்டம்: விபத்துக்கள் குறித்து அதிகாரிகளின் எச்சரிக்கை!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சாலைப் போக்குவரத்து விபத்துக்கள் மற்றும் பட்டாசு தொடர்பான...

world 27
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு!

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய...

world 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா ஜயவர்தன நியமனம்!

இலங்கை முதலீட்டுச் சபையின் (Board of Investment – BOI) பதில் தலைவராக டாக்டர் சுலக்ஷனா...