4 8
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து பால் மாவுடன் இலங்கை சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

Share

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த பெண் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

உடலை வெள்ளையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் விட்டமின் அடங்கிய பால் மாவுடன் வந்த இருவரை அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சட்டவிரோதமான முறையில் டின்னில் அடைக்கப்பட்ட 179 பால் மா டின்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த விட்டமின்களின் பெறுமதி 18 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கொட்டஹேன மற்றும் நீர்கொழுப்பு பகுதிகளை சேர்ந்த ஆணும் பெண்ணுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...