9 4
இலங்கைசெய்திகள்

இலங்கையின் தொழிற்சங்கங்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை

Share

இந்த ஆண்டு பாதீட்டில் அரச ஊழியர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தங்கள், அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் பலவீனமான பொருளாதார மீட்சி தடைப்படக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியம், இன்று (4) எச்சரித்துள்ளது.

அநுர குமார திசாநாயக்கவின் முதல் பாதீடு, பொதுத்துறை சம்பளத்தை உயர்த்தியது மட்டுமல்லாமல், நாட்டின் நலிந்த நிதிகளை சரிசெய்யும் முயற்சியாக நீண்டகால சலுகைகளில் ஆழமான குறைப்புக்களையும் செய்துள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் முக்கிய மருத்துவர்கள் சங்கம் தங்கள் கொடுப்பனவுகளில் குறைப்புக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புதன்கிழமை முதல் பணி நிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஆசிரியர்களும் பணி நிறுத்தங்களை பரிசீலித்து வருகின்றனர். எனினும், இலங்கையின் சிக்கனத் திட்டத்திற்கான “கடைசி பெரிய உந்துதல்” இந்த பாதீடு என்றும், அதன்பிறகு, முன்னோக்கிச் செல்வது மிகவும் எளிதாக இருக்கும் என்றும், சர்வதேச நாணய நிதிய குழுத் தலைவர் பீட்டர் ப்ரூயர் கூறியுள்ளார்.

அத்துடன் தியாகம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ள அவர், சீர்திருத்தங்களுடன் இணைந்து கொள்வது, இலங்கையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான சிறந்த வழி” என்றும் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....