20 2
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டிலிருந்து வருவோருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நவீன வசதி

Share

வெளிநாட்டிலிருந்து வருவோருக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் நவீன வசதி

வெளிநாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை விமானத்தில் இருந்து இறக்கும் ஏணிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்குள் செயற்படும் பேருந்துகள் மற்றும் விமானங்களை அணுகப் பயன்படுத்தப்படும் ஏணிகள் மிகவும் பழமையானவை பல குற்றச்சாட்டுக்கள் பயணிகளால் முன்வைக்கப்பட்டுள்ளன.

அண்மையில் குறித்த ஏணியில் இறங்கும் போது பயணி ஒருவர் தவறி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விமான நிலைய நிர்வாகம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு புதிய பேருந்துகள் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய ஏணிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் ஏணிகள் 30 வருடத்திற்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...