13 2
இலங்கைசெய்திகள்

சிறை செல்ல தயாரான நாமலை ஏமாற்றிய அநுர அரசு

Share

சிறை செல்ல தயாரான நாமலை ஏமாற்றிய அநுர அரசு

நிதி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப் புலனாய்வு பிரிவு நிதி மற்றும் வணிகக் குற்றப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிற்கான விமானக் கொள்முதல் பரிவர்த்தனையில் இடம்பெற்ற நிதி மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நோக்கில் நாமல் அழைக்கப்பட்டார்.

கடந்த புதன்கிழமை அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் அரச விடுமுறை நாள் என்பதால் தான் கைது செய்யப்படலாம் என நாமல் ராஜபக்ச எதிர்பார்த்திருந்தார்.

தான் கைது செய்யப்பட்டால், அது தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என நாமல் எதிர்பார்த்திருந்தார். அதன்மூலம் மக்கள் மத்தியில் அனுதாப அலையை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

எனினும் அன்று நாமல் கைது செய்யப்படவில்லை, சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் அளித்த பிறகு வெளியேறியிருந்தார். இது அவரின் அடுத்தகட்டத்திற்கான திட்டத்திற்கான மேலும் ஏமாற்றமாக அமைந்திருந்தது.

அன்றையதினம் நாமல் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் பரபரப்பாக தகவல்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...