9 2
உலகம்செய்திகள்

வேலை தேடுவோருக்கான புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ள ஜேர்மனி

Share

வேலை தேடுவோருக்கான புதிய விசா முறையை அறிமுகப்படுத்தியுள்ள ஜேர்மனி

ஜேர்மனி (Germany) புதிதாக அறிமுகப்படுத்திய German Opportunity Card (Chancenkarte) விசா திட்டத்தின் தகுதி அளவுகோல்கள் தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தநிலையில், இந்த விசா திட்டமானது திறமையான தொழிலாளர்களை (skilled workers) ஜேர்மனிக்கு வரவேற்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது புள்ளி அடிப்படையிலான (points-based) தேர்ச்சி முறையில் செயல்படும்.

இந்த Opportunity Card விசா முதல் கட்டமாக ஒரு வருடத்திற்கு வழங்கப்படும்.

அத்தோடு கல்வி, வேலை அனுபவம், மொழி திறன் மற்றும் வயது போன்ற காரணிகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

வேலையாட்கள் குறைவாக இருக்கும் தொழில்களில் அனுபவம் உள்ளவர்கள், முன்னதாக ஜேர்மனியில் வாழ்ந்த அனுபவம் உள்ளவர்கள் மற்றும் தகுதியான வாழ்க்கை துணையுடன் விண்ணப்பிக்கும் நபர்கள் கூடுதல் புள்ளிகளைப் பெறலாம்.

விண்ணப்பிக்க கல்வித் தகுதி, வேலை அனுபவ சான்றுகள், மொழித் தேர்ச்சி, நிதி ஆதாரம் மற்றும் மருத்துவ காப்பீட்டுச் சான்றுகள் தேவையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, விண்ணப்பங்கள் ஜேர்மனி குடியேற்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வெளிநாட்டு ஜேர்மன் தூதரகங்கள் சேவை கட்டணத்துடன் விண்ணப்பங்களை செயல்படுத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம், திறன்மிகுதொழிலாளர்களுக்கு ஜேர்மனியில் வேலை வாய்ப்புகளைத் தேடுவதற்கான அமைப்புசார்ந்த வழியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...

25 690c956ec39eb
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கண் பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து: மின் ஒழுக்கு காரணமெனத் தகவல்!

திருகோணமலைத் துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அருகாமையில் உள்ள ஒரு தனியார் கண்...