14 1
இலங்கைசெய்திகள்

தமிழ் மக்களுக்கு உலகம் அமைத்துக் கொடுத்த மேடையே ஜெனீவா – சி.அ.யோதிலிங்கம்

Share

தமிழ் மக்களுக்கு உலகம் அமைத்துக் கொடுத்த மேடையே ஜெனீவா – சி.அ.யோதிலிங்கம்

தமிழ் மக்களுக்கு உலகம் அமைத்துக் கொடுத்த சர்வதேச மேடையே ஜெனீவா என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் வாராந்தம் வெளியிடும் அரசியல் ஆய்விலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும்,

“ஜெனிவா தமிழ் மக்களைப் பொறுத்தவரை பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. அதில், முதலாவது அது தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளி உலகத்திற்கு கொண்டு செல்வதற்கு கிடைத்த மிகப்பெரிய சர்வதேச மேடையாக உள்ளது.

ஒருவகையில், ஜெனிவா, தமிழ் மக்களுக்காக சர்வதேசம் அமைத்துக் கொடுத்த மேடை எனலாம். ஜெனிவா கூட்டங்களின் போது முழு உலகத்தின் கவனமும் ஜெனிவா பக்கம் திரும்பியிருக்கும்.

தேசிய பிரச்சினை சாராம்சத்தில் சர்வதேசப் பிரச்சினை என்ற வகையில் ஜெனிவா இந்த இடத்தில் பெரிய பங்கினை தமிழ் அரசியலில் வகிக்கின்றது.

இதனை ஐ.நா மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இலங்கை மனித உரிமை மீறல் விவகாரம் தற்போது சர்வதேசத்தின் அவதானத்தை பெற்றுள்ளது என அது கூறியிருக்கின்றது. ஜெனிவா தமிழ்த்தரப்பு சர்வதேச ரீதியாக உறவுகளைப் பலப்படுத்த உதவுகின்றது.

நாடுகளின் பிரதிநிதிகள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வதேச சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சர்வதேச ஊடகவியலாளர்கள் என உறவுகளையும் தொடர்புகளையும் வலுப்படுத்த உதவுகின்றது. சர்வதேச மயப்படுத்தலுக்கு தொடர்புகள் மிகவும் அவசியமானவையாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...

articles2FrDVWgfzZnKKLShSLrBUZ
செய்திகள்இலங்கை

டித்வா பேரழிவில் இருந்து மீள இலங்கைக்கு பிரித்தானியா அவசர நிவாரண நிதி உதவி!

டித்வா புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட பாரிய பேரழிவில் இருந்து இலங்கை மீள்வதற்காக, பிரித்தானிய அரசாங்கமும் அவசர...

13845820 trump 12
செய்திகள்உலகம்

வெளிநாட்டினர் அமெரிக்காவில் புலம் பெயர்வதற்கான தடை நீண்ட காலம் நீடிக்கும்: ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!

வெள்ளை மாளிகைக்கு அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஆப்கானிஸ்தான் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்...