15
உலகம்செய்திகள்

போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் குறுக்கிட்ட ட்ரம்ப்: ஜெலென்ஸ்கியுடன் வெடித்த வாக்குவாதம்

Share

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினை ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்த உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி வான்ஸ், ரஷ்யாவுடன் போரில் ஈடுபடுவதற்கு உங்கள் நாட்டில் வீரர்கள் இல்லை என கூறியுள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வீரர்கள் இருக்கின்றார்களா என்பதனை தங்கள் நாட்டிற்கு வந்து பார்க்குமாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், இடையில் குறுக்கிட்டு பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அவ்விடத்தில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜெலென்ஸ்கியை நோக்கி கோபமாக பேசிய ட்ரம்ப், “நீங்கள் எங்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். அத்துடன் நீங்கள் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லது நாங்கள் இதிலிருந்து வெளியேறிவிடுவோம்.

அதுமாத்திரமன்றி, உங்களிடம் போதுமான துருப்புக்கள் இல்லை, நீங்கள் போர் நிறுத்தத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை எங்களிடம் கூற முடியாது.

நீங்கள் எங்கள் நாட்டிற்கு அவமரியாதையை ஏற்படுத்துகின்றீர்கள், எனக்கு தெரியும் உங்களால் போரில் வெற்றி பெற முடியாது என்று. எனவே, நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.

ஆனால் இது போன்று ஒப்பந்தம் செய்வது மிகவும் கடினமானது, எங்கள் ஆயுதங்கள் இல்லையென்றால் இந்த போர் எப்போதோ முடிந்து இருக்கும்.

நீங்கள் தனியாக செயற்பட்டதில்லை, ஆனால் நீங்கள், முட்டாள் ஜனாதிபதியே எங்களிடம் 350 பில்லியனை பெற்றுள்ளீர்கள், அத்துடன் எங்கள் ஆயுத தளபாடங்கள் இல்லையென்றால் இந்த போர் 2 வாரங்களில் முடிந்திருக்கும்” என கடுமையாக உரையாடியுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...