1 53
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவு : அம்பலப்படுத்திய பிரதமர்

Share

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவு : அம்பலப்படுத்திய பிரதமர்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று (27.02.2025) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) 2010 முதல் 2014 வரை – 3,572 மில்லியன்

மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) – 2015 முதல் 2019 வரை 384 மில்லியன்

கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) – 2020 முதல் 2022 வரை 126 மில்லியன்

ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) – 2023 மற்றும் 2024 க்கு இடையில் 533 மில்லியன் என தெரிவித்துள்ளார்

மேலும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் பயன்படுத்தியதாகவும்  2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டது எனவும் இது ரூ. 1,144 மில்லியன் என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...