21 6
உலகம்செய்திகள்

சுற்றுலா விசாவை தொழில் விசாவாக மாற்ற தடை விதித்த நாடு

Share

சுற்றுலா விசாவில் பஹ்ரைனுக்கு (Bahrain) சென்று தொழில் விசாவாக மாற்ற முடியாது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த விடயத்தை உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது என இலங்கைக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பை மேற்கோள்காட்டி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (Srilanka Bureau of Foreign Employment) தெரிவித்துள்ளது.

பஹ்ரைனின் 1965 குடியேற்றச் சட்டத்தின் திருத்தங்களின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும் ஒரு வெளிநாட்டவர் நுழைவு விசாவை தொழில் அல்லது குடியிருப்பு அனுமதியாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இருப்பினும், சுற்றுலா விசாவை சலுகைக் காலத்துடன் கூடிய பணி விசாவாக மாற்ற அனுமதிக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன, அதன்படி, முன்னர் வசூலிக்கப்பட்ட 60 பஹ்ரைன் தினார் கட்டணம் 250 பஹ்ரைன் தினார்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2024 பிப்ரவரி 13 முதல் பஹ்ரைன் மாநிலத்தில் வேலைவாய்ப்புக்காக சுற்றுலா விசா மூலம் நுழைவதை தடை செய்ய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதன்படி, தொடர்புடைய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் இந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் திகதி பஹ்ரைன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, 1965 ஆம் ஆண்டு பஹ்ரைனின் குடிவரவுச் சட்டத்தின் திருத்தங்களின்படி, எந்தவொரு சூழ்நிலையிலும், அனுசரணையாளர் இல்லாத வெளிநாட்டவர் நுழைவு விசாவை பணி வதிவிட அனுமதியாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த சூழ்நிலையின் அடிப்படையில், பஹ்ரைனில் அதிகளவானோர் சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி பஹ்ரைனில் பணிபுரிவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

எக்காரணம் கொண்டும், அனுசரணையாளர் இல்லாமலும், சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி பணியகத்தில் பதிவு செய்யாமலும் பஹ்ரைனில் வேலை தேடுவதற்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று பணியகம் புலம்பெயர்ந்த சமூகத்தை கேட்டுக்கொள்கிறது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...