12 31
இலங்கைசெய்திகள்

செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரன் முன்கூட்டியே அறிந்திருந்த ரகசியம் – பொலிஸார் தகவல்

Share

கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும், அவர் நாட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடிய அனைத்து கடல் வழிகள் மற்றும் விமான நிலைய வழிகளும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தலைமறைவாகியுள்ள இஷாரா , கடுவெல பகுதியில் உள்ள ஒரு விடுதியில் வைத்து கொலைக்குத் தேவையான துப்பாக்கியை, துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளில், சந்தேக நபரின் தாயார் மற்றும் சகோதரருக்கும் இந்தக் கொலை குறித்துத் தெரியும் எனவும், அதற்கு முன்னர் அவர்கள் இது தொடர்பாக தொலைபேசி உரையாடல்களை பரிமாறிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக, சந்தேக நபரின் தாயார் மற்றும் சகோதரரை குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று இரவு கைது செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதான சந்தேக நபரான இஷார செவ்வந்தி, ஹெராயின் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1737780894 1737780362 yoshitha L
அரசியல்இலங்கைசெய்திகள்

யோஷித ராஜபக்ஷவின் பாட்டியின் மனநிலை பரிசோதனை: பணச் சலவை வழக்கு விசாரணை பெப்ரவரி 9 வரை ஒத்திவைப்பு!

பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன்...

Ajith Nivard Cabraal
அரசியல்இலங்கைசெய்திகள்

கிரேக்க பிணைமுறி வழக்கு: மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுடன் மூவர் விடுதலை!

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கிரேக்க பிணைமுறி வழக்குடன் (Greek Bonds Case) தொடர்புடைய குற்றச்சாட்டுகளிலிருந்து...

images 21
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மீகஹகிவுல பிரதேசத்தில் மீண்டும் நிலச்சரிவு: உயிர்ச்சேதம் இல்லை!

மீகஹகிவுல பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மொரஹெல – மீகொல்ல பகுதியில் உள்ள ஒரு நிலச்சரிவு அபாயம்...