5 47
உலகம்செய்திகள்

ட்ரம்பின் அதிரடி! USAID- இன் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம்

Share

ட்ரம்பின் அதிரடி! USAID- இன் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்காவை சேர்ந்த USAID நிறுவனத்தின் 2,000 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தில்(USAID )சுமார் 2,000 ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், மீதமுள்ள முழுநேர ஊழியர்களில் பெரும்பாலோர் இரவு முழுவதும் நிர்வாக விடுப்பில் அனுப்பப்படுவார்கள் எனவும், அனுப்பட்ட தொழிலாளர்களுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் உதவி செய்து வருகிறது.

இதற்கான நிதி முழுவதும் அமெரிக்க அரசால் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைப்பின் பணிகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இதன்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிதியுதவி நிறுத்தும் உத்தரவுக்கு தற்காலிக தடை விதித்தது.

பின்னர் இந்த தடையை அந்நாட்டு நீதிமன்றம் நீக்கியிருந்தது.

இந்த நிலையில் உலகளவில் USAID அமைப்பை சேர்ந்த சுமார் 1600 பணியாளர்களை ட்ரம்ப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் சில ஊழியர்களை தவிர மற்ற அனைவரையும்(400 பேர்) விடுப்பில் அனுப்புவதாகவும் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 17
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையர்கள் அகதிகளாக வாட வேண்டிய அவசியமில்லை! – தமிழக முதல்வரின் கோரிக்கைக்கு நாமல் ராஜபக்ஷ வரவேற்பும், ஆலோசனையும்!

தமிழக முகாம்களில் உள்ள 89,000 இலங்கையர்களுக்கு இந்தியக் குடியுரிமை அல்லது நீண்டகால விசா வழங்கக் கோரி...

image 1200x800 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026-இல் 19 நாட்களுக்கு மதுபான விற்பனைக்குத் தடை! – மதுவரித் திணைக்களம் அதிரடி அறிவிப்பு!

2026-ஆம் ஆண்டில் பௌர்ணமி தினங்கள் மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் உட்பட மொத்தம் 19 நாட்களுக்கு...

image 1200x800 26
செய்திகள்அரசியல்இலங்கை

AI-யால் உலகை வெல்வோம்! – இந்தியப் பிரதமரின் அழைப்பின் பேரில் நாளை டெல்லி செல்கிறார் ஜனாதிபதி அநுர!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பை ஏற்று, புதுடெல்லியில் நடைபெறவுள்ள ‘இந்தியா – AI...

image 1200x800 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன விலைகள் குறையவே வாய்ப்பு! – வரி அதிகரிப்புச் செய்திகளை மறுக்கும் நிதி அமைச்சு; விற்பனையாளர்களின் தந்திரம் அம்பலம்!

இலங்கையில் வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை என்றும், இது பொதுமக்களிடையே...