21 5
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களில் உருவாக்கப்படும் விசேட பிரிவு

Share

அரச நிறுவனங்களில் உருவாக்கப்படும் விசேட பிரிவு

சகல அரசு நிறுவனங்களிலும் ஒரு உள்ளக செயல்பாட்டு பிரிவை (Internal Operations Unit) அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலாளர், என்.எஸ். குமாரநாயக்க, இதற்கான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரிவு உருவாக்கத்தின் முதன்மை நோக்கங்கள்:

• அரசு நிறுவனங்களுக்குள் ஊழலை தடுப்பது

• ஒழுங்குமுறை பண்பாட்டை மேம்படுத்துதல்

• வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்தல்

• நெறிமுறையுடன் நிர்வாகத்தை மேம்படுத்துதல்

• இலஞ்ச ஊழல் ஆணையத்துடன் இணைந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த உதவுதல்

அனைத்து அரசு நிறுவனங்களிலும் ஒரு சிறப்பு பிரிவாக இந்த உள் செயல்பாட்டு பிரிவு அமைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் தலைமையிலான அலுவலகங்களில் இந்த பிரிவு உருவாக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக, அமைச்சு செயலாளர்கள், மாகாண பிரதான செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் எழுத்து மூலம் அறிவிப்பை வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...