17 14
இலங்கைசெய்திகள்

அழிக்கப்பட்ட முக்கிய சாட்சியங்கள்! ராஜபக்சர்கள் மீது குற்றச்சாட்டு

Share

அழிக்கப்பட்ட முக்கிய சாட்சியங்கள்! ராஜபக்சர்கள் மீது குற்றச்சாட்டு

ராஜபக்ச தரப்பால் மரபுரிமையாகப் முன்னெடுக்கப்பட்ட கொலைகளே நாட்டில் பல முக்கிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சாட்சியங்களை இல்லாதொழித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

மித்தெனியவில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மித்தெனியவில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர், ராஜபக்ச குடும்பத்துடன் ஏற்பட்ட முறிவு காரணமாக, சில உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய இந்த கொலை தொடர்பில் விரிவான விசாரணையைத் தொடங்க வேண்டும்.

இந்தக் கொலைகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பது அவசியம். சாட்சிகளைக் கொல்வது ஒரு கலாச்சாரமாகிவிட்டது.

குற்றச்செயல்களின் சாட்சிகளைக் கொல்வது சட்டத்துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

மேலும், லசந்த விக்ரமதுங்க, தாஜுடின், எக்னலிகொட போன்றோர் தொடர்பான வழக்குகளில் உள்ள ஆதாரங்கள் இவ்வாறே மறைக்கப்பட்டன.

இவை ராஜபக்ச தரப்பால் மரபுரிமையாக முன்னெடுக்கப்பட்ட கொலைகள்” என்றார்.

Share
தொடர்புடையது
Muthur
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவிலாறு அணைக்கட்டு உடைந்ததால் வெள்ளம்: திருகோணமலை-மட்டக்களப்பு வீதி மூழ்கியது; 309 பேர் வான்வழியாக மீட்பு!

அதிக மழைவீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிந்த திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டின் ஒரு பகுதி நேற்று (நவம்பர்...

images 14
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாயாறு பிரதான பாலம் உடைந்தது: முல்லைத்தீவிலிருந்து மணலாறு, திருகோணமலை போக்குவரத்து முற்றாகத் தடை!

நாட்டில் தொடர்ந்து நிலவி வரும் வெள்ளப் பெருக்கு காரணமாக, முல்லைத்தீவில் உள்ள நாயாறு பிரதான பாலம்...

images 13
செய்திகள்இலங்கை

வெள்ளம் பாதித்த பகுதிகளில் ‘கொதித்தாறிய நீரை’ மட்டுமே அருந்தவும்: சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!

வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்கள் குடிநீரைப் பயன்படுத்துவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று...

img 692c75999ccf8
செய்திகள்இலங்கை

ஹெலிகொப்டர் விபத்தில் விங் கமாண்டர் நிர்மால் சியம்பலாபிட்டிய உயிரிழப்பு: விமானப்படை இரங்கல்!

சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, வென்னப்புவ, லுணுவில...