10 35
உலகம்செய்திகள்

புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்திய முக்கிய நாடு : வேலையற்றோருக்கு மகிழ்ச்சி தகவல்

Share

புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்திய முக்கிய நாடு : வேலையற்றோருக்கு மகிழ்ச்சி தகவல்

ஜேர்மனியில் (Germany) புதிய டிஜிட்டல் விசா முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மன் அரசாங்கம் அதன் Consular Services Portal-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்பங்களை நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய டிஜிட்டல் விசா முறை ஜேர்மனியில் வேலை, கல்வி மற்றும் பயிற்சிக்கான விசாக்களை விரைவாக அனுமதிக்க உதவுகின்றது

ஜேர்மனியில் தொழிலாளர்களுக்கான கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 400,000 திறமையான பணியாளர்கள் தேவைப்படுவதாக வெளியுறவு அமைச்சர் அனலேனா பேயர்போக் தெரிவித்துள்ளார்.

சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து உறுதிப்படுத்துவதற்காக அதிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த புதிய டிஜிட்டல் விசா முறைமை விரைவாகவும் எளிமையாகவும் உலகளாவிய திறமையான பணியாளர்களுக்கு ஜேர்மனியில் வேலை வாய்ப்புகளைத் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...

20 15
செய்திகள்உலகம்

ஈரானின் முக்கிய இலக்குகள் மீது தாக்குதல்: உச்ச தலைவர் பயன்படுத்திய விமானத்தை அழித்ததாக இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் நேற்று இரவு தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில்,...

19 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பாடசாலைகளை மூடுவது அல்லது இணையவழி கற்றலுக்கு மாறுவது குறித்து கல்வி அமைச்சு அறிவிப்பு

நாட்டில் தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் நீண்டு...

18 14
செய்திகள்உலகம்

6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சீனா – வடகொரியா விமானச் சேவை: போக்குவரத்துத் துறையில் முக்கியத் திருப்பம்!

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு முதல் சீனா மற்றும் வடகொரியா இடையிலான...