4 37
இலங்கைசெய்திகள்

காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் எம்.பி கஜேந்திரன்

Share

காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் எம்.பி கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) காவல்துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இன்று (20) பகல் 12.00 மணிக்கு பலாலி காவல் நிலையத்திற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இராணுவத்தினரின் துணையுடன் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றக் கோரி ஒவ்வொரு பெளர்ணமி நாட்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

இந்தநிலையில், குறித்த போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே பலாலி காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்புக் கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...