25 67b5dd0d206f8
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தல் : தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

Share

உள்ளூராட்சி தேர்தல் : தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி கட்டுப்பணத்தை திரும்ப பெறுவதற்காக பெப்ரவரி 28, 2025 க்கு முன்னர் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் எழுத்துபூர்வமாக விண்ணப்பிக்கமுடியும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு இன்று(19) அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்கு வைப்புத்தொகை

2023உள்ளூராட்சி தேர்தலுக்கு வைப்புத்தொகை செலுத்திய வேட்பாளர்கள், வைப்புத்தொகை சிட்டைகளை தாங்கள் தொடர்புடைய மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் வைப்புத்தொகையைப் பெறலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வேட்பாளர்கள் தங்கள் வைப்புத்தொகை சிட்டைகளை பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன் எழுத்துபூர்வ கோரிக்கையுடன் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தகுதியான வேட்பாளர்களுக்கு நிதியை தாமதமின்றி திருப்பித் தர தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...