10 32
இலங்கைசெய்திகள்

ரணிலின் பட்ஜெட்டையே அநுரவும் முன்வைப்பு : சஜித் தரப்பு விமர்சனம்

Share

ரணிலின் பட்ஜெட்டையே அநுரவும் முன்வைப்பு : சஜித் தரப்பு விமர்சனம்

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வரவு – செலவுத் திட்டத்தையே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ளார் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

நாட்டில் 7 தசாப்தகால பயணம் சரி என்பதை அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுள்ளார் என்பதையே பாதீட்டு முன்மொழிவுகள் உறுதிப்படுத்துகின்றன என்று பொருளாதார நிபுணரும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினருமான கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசின் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

“ரணில் விக்ரமசிங்கவின் மூன்றாவது வரவு – செலவுத் திட்டத்தை அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்துள்ளார் என்பது போல்தான் நிலைமை உள்ளது.

இதுவரை காலமும் நாட்டில் இருந்த பொருளாதார முறைமை தோல்வி என்று கூறிவந்த ஜே.வி.பியின் தலைவர், சர்வதேச நாணய நிதியத்தின் நெறிமுறைகளுக்கு அமையச் செயற்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தில் திருத்தம் செய்து அதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

தனியார் மயமாக்கல் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே, நாடு புதிய திசையை நோக்கிச் செல்லவில்லை. 77 வருட கால பயணம் சரி என்பதை ஜனாதிபதி அநுரகுமார ஏற்றுள்ளார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...