6 36
உலகம்செய்திகள்

போர்நிறுத்த விவகாரம்! பகைமை மறந்து இராஜதந்திரங்களை வகுக்கும் ரஷ்யா – அமெரிக்கா

Share

போர்நிறுத்த விவகாரம்! பகைமை மறந்து இராஜதந்திரங்களை வகுக்கும் ரஷ்யா – அமெரிக்கா

சவூதி அரேபியாவில் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த உக்ரைனுடனான போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் நான்கு கொள்கைகளுக்கு உடன்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கொள்கைகளை ரூபியோ பின்வருமாறு விளக்கியிருந்தார்.

1. அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் உள்ள எங்கள் தூதரகங்களின் செயல்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு, தற்போதைய பாதையில் நாம் தொடர்ந்து செல்ல இராஜதந்திர வசதிகள் காணப்பட வேண்டும்.

2. உக்ரைனுடனான மோதல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவும், பணியாற்றவும் எங்கள் தரப்பில் இருந்து ஒரு உயர்மட்டக் குழுவை நியமிக்கப் போகிறோம்.

3. உக்ரைனில் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதன் விளைவாக ஏற்படக்கூடிய புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு இரண்டையும் பற்றி விவாதிக்கவும் சிந்திக்கவும் தொடங்குவோம்.

4. உற்பத்தித் திறன் மிக்கதாக முன்னேற்றத்தை உறுதிசெய்ய தொடர்ந்து ஈடுபடுவோம்.” என மார்கோ சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக இந்த பேச்சுவார்த்தையில் மார்கோ ரூபியோ , அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், இரு நாடுகளுக்கு இடையேயான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி உதவியாளர் யூரி உஷாகோவ் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

உக்ரைனில் போர் முடிவுக்கு வந்தால் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கக்கூடும் என்றும் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.

பொது நலன் சார்ந்த பிரச்சினைகளில் புவிசார் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ரஷ்யர்களுடன் பங்காளியாக அமெரிக்காவிற்கு நம்பகமான வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் ரூபியோ கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் பல வருட பகைமைக்குப் பிறகு ஒரு “மிகப்பெரிய சாதனை” என்று ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியத்தின் தலைவரும், சவுதி அரேபியாவின் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவின் ஒரு அங்கத்தவரான கிரில் டிமிட்ரிவ் கூறியுள்ளார்.

அத்தோடு, அமெரிக்க-ரஷ்யா உறவுகளில் முன்னேற்றம் சிறந்த அடித்தளத்திலிருந்து தொடங்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...