5 33
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட தங்கங்கள்! ட்ரம்ப்பின் முடிவால் பதற்ற நிலை

Share

பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட தங்கங்கள்! ட்ரம்ப்பின் முடிவால் பதற்ற நிலை

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் காரணமாக பல பில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தை லண்டனில் இருந்து அமெரிக்க வங்கிகள் வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா, சீனா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் ஏற்கனவே அதிகப்படியான வரியை விதித்துள்ளார்.

இந்நிலையில், ட்ரம்ப் அடுத்ததாக ஐரோப்பாவை குறிவைக்கக் கூடும் என்ற அச்சத்தினாலேயே அமெரிக்க வங்கிகள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனையடுத்து, நவம்பர் 5ஆம் திகதி 50 பில்லியன் டொலர்களாக இருந்த அமெரிக்காவின் தங்க இருப்பு, தற்போது 106 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது.

இதனால், பிரித்தானியாவில் தங்கத்தின் இருப்பில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும், ட்ரம்பின் வரி அச்சுறுத்தல் காரணமாக உலக சந்தையில் தங்கத்தின் விலையில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...