4 30
உலகம்செய்திகள்

உயிரிழந்தவர்களுடன் வாழும் வினோத கிராமம்!

Share

உயிரிழந்தவர்களுடன் வாழும் வினோத கிராமம்!

இந்தோனேசியாவின்(Indonesia) டோராஜன்(Toraja) மக்கள் ஒரு தனித்துவமான பாரம்பரியத்தை கடைப்பிடிக்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவர்களைப் பொறுத்தவரை மரணம் என்பது முடிவல்ல.அது மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கைக்கு ஒருவரை அழைத்துச் செல்கின்றது.

இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் வினோதமான பழக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். அதாவது உயிரிழந்தோரின் உடலைப் பல வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் வரையில் வீட்டில் அப்படியே வைத்திருக்கிறார்கள்.

மேலும், இறந்தவர்கள் உயிருடன் இருப்பதைப் போலவே அவர்களை நடத்துகிறார்கள். டோராஜன் இன மக்கள் தங்கள் குடும்பத்தில் யாராவது உயிரிழந்தால் அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள் என்பதை விட நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவே கருதுகிறார்களாம்.

உயிரிழந்தோருக்கு வீட்டில் தனியாக ஒரு அறை, புதிய ஆடைகள் மட்டுமின்றி அவர்களுக்கான அறையை தொடர்ந்து சுத்தம் செய்தும் வருகிறார்கள். மேலும், நேரத்திற்கு உணவு, சிகரெட் அவ்வளவு ஏன் கழிப்பறை அமைப்பு போன்ற அம்சங்களும் உள்ளனவாம்.

இதே நடைமுறையைத் தான் அவர்கள் மாதக் கணக்கில் பின்பற்றுவார்களாம். குடும்பத்தில் ஒருவர் நம்மை விட்டுப் பிரியும்போது அந்த துயரத்தை ஈடு செய்ய முடியாது.

அப்போது உடனே அவரை புதைத்துவிட்டால் அது பெரும் சோகமாக அமையும் என்ற காரணத்தினால் இந்த முறை பின்பற்றப்படுவதாக கூறப்படுகின்றது.

அவர்களது இழப்பை மனது ஏற்றுக் கொள்ளும் வரை வீட்டிலேயே வைத்திருப்பதுடன் அதன் பிறகே அடக்கம் செய்கிறார்கள். இப்படிப் பல மாதங்களுக்குப் பிறகு டோராஜன் இன மக்கள் பிரம்மாண்ட இறுதிச் சடங்குகளை நடத்துவார்கள்.

ஒருவரது அந்தஸ்தைப் பொறுத்து இந்த இறுதிச் சடங்கு மாறுபடும். அங்குப் பணத்தைப் பொறுத்து இறுதிச் சடங்கைப் பிரம்மாண்டமாக நடத்துகிறார்கள். பணக்காரர்கள் மற்றும் அதிக செல்வாக்கு கொண்ட நபர்கள் விருந்துகளை வைப்பார்கள். இசை, நடனம் எனப் பிரம்மாண்டமான முறையில் இறுதிச் சடங்கை நடத்துவார்கள்.

மேலும், அந்நாட்டுக் கலாச்சாரத்தில் எருமைகள் புனிதமாகக் கருதப்படும். இறந்தவரின் பயணத்தை அடையாளப்படுத்தும் வகையில், அந்த எருமைகளைப் பலியிட்டு விருந்து கொடுப்பார்களாம்.

இதன் காரணமாக இறுதிச் சடங்கை நடத்த போதுமான நிதி சேகரிக்கப்படும் வரை உடலை அங்கு வீட்டிலேயே வைத்திருப்பார்களாம். இந்த சடங்குகள் அனைத்தும் முடியும் வரை அவரது ஆன்மா அங்கேயே சுற்றி வரும் என்றே நம்பப்படுகிறது.

உடலைப் புதைத்த பிறகும் கூட டோராஜன்கள் இன மக்கள் மானேனே என்ற சடங்கைத் தொடர்ந்து செய்வார்கள்.

அதாவது புதைக்கப்பட்ட சடலங்களை எடுத்து அதைச் சுத்தம் செய்வார்களாம். அப்போது அவர்கள் அவர்களுக்கு புதிய ஆடைகளை உடுத்தி, அழகுபடுத்துகிறார்கள்.

மேலும், புகைப்படங்கள் எடுத்துக் கொள்வார்கள்.. இதை முதியவர்களுக்குக் காட்டும் மரியாதையாகவே கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...