10 26
உலகம்செய்திகள்

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கும் விடயம்: வலுக்கும் பிரச்சினை

Share

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்கும் விடயம்: வலுக்கும் பிரச்சினை

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடா மீது 25 சதவிகித கூடுதல் வரிகள் விதிப்பது மற்றும் கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆக்குவது குறித்து அறிக்கை விடுத்துக்கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில், புதன்கிழமையன்று, கனடாவின் 13 மாகாண பிரீமியர்களும் வெள்ளை மாளிகை அதிகாரிகளை சந்தித்து இந்த விடயம் குறித்த தங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்த முரண்பட்ட தகவல்களை இருதரப்பினரும் வெளியிட்டுள்ளனர்.

அதாவது, கனடா தரப்பில் வெள்ளை மாளிகை அதிகாரிகளை சந்தித்தவர்களில் ஒருவரான பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரீமியரான டேவிட் எபி, கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறிவரும் கருத்துக்கள் குறித்து தாங்கள் கவலை தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்த ட்ரம்பின் கருத்து குறித்து வெளிப்படையாக தாங்கள் பேசியதாகவும், அது நடக்காது என்பதை தாங்கள் அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் டேவிட் எபி தெரிவித்துள்ளார்.

ஆனால், கனேடிய பிரீமியர்களை சந்தித்த வெள்ளை மாளிகை அதிகாரிகளில் ஒருவரான ஜேம்ஸ் பிளேர் என்பவரோ, கனடா அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக ஆகாது என்பதை தான் ஒப்புக்கொள்ளவே இல்லை என்று கூறியுள்ளார்.

பிரீமியர் டேவிட் எபியின் கருத்துக்களை ட்ரம்புடன் பகிர்ந்துகொள்வதாக மட்டுமே நாங்கள் தெரிவித்தோம் என்றும் ஜேம்ஸ் பிளேர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ஆக, கனடாவில் 13 பிரீமியர்கள் சென்று வெள்ளை மாளிகை அதிகாரிகளை சந்தித்தும், அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றே தோன்றுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...